tamilnadu

img

அரசு அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டிய பாஜக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு


உத்திரபிரதேசத்தில் அரசு அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டிய பாஜக எம்எல்ஏ மீது காவல்துறையினர் வழக்க பதிவு செய்துள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில், மின் துறையில் பொறியியலாளராக உள்ள ராம் கிஷோர் என்பவரை கைபேசியில் தொடர்பு கொண்ட பாஜக எம்.எல்.ஏ. சுதேந்திர சிங்,  இளநிலை பொறியியலாளர் ஒருவரை பணி இடமாற்றம் செய்யும்படி வற்புறுத்தி உள்ளார். அதில் உள்ள சிரமங்கள் குறித்து கிஷோர் கூறியுள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த சிங் கிஷோரை தகாத சொற்களால் திட்டிய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டியும் உள்ளார் என கிஷோர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

அவர் அளித்த புகாரின் நகல்கள் மற்றும் உரையாடல்களின் ஆடியோ ஆகியவற்றை துறையின் மூத்த அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.


 

;